பொதுவாக, ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம் பொருட்களை வாங்கும் போக்கு மக்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால், ஆன்லைன் நிறுவனங்கள் தாங்கள் விற்பனையாளரையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் தளம் மட்டுமே எனக் கூறிக்கொண்டு பணம் செலுத்தி வாங்கப்பட்ட பொருளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்றும் விற்பனையாளரே பொறுப்பு என்றும் தெரிவித்து வருகின்றன. இதனால், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் கவனமாக இருப்பது அவசியமாக உள்ளது.
தாங்கள் விவரங்கள் அடங்கிய லேபிள் ஒட்டிய பொட்டலங்களைதான் விற்பனை செய்தோம் என கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று (23-07-2024) வழங்கிய தீர்ப்பில் நுகர்வோர் புகாரை தக்க சாட்சியம் மற்றும் ஆவணங்களுடன் நிரூபித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களாட்சி அரசில் அத்தியாவாசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை நிர்ணயம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். அரசு தமது கடமைகளை விலக்கிக் கொண்டு அத்தியாவாசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை நிர்ணயம் செய்ய மாற்று அமைப்பிடம் அரசின் கட்டுப்பாடு இல்லாமல் ஒப்படைப்பது சரியானது அல்ல என்று நுகர்வோர் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
விருப்பமுள்ளவர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். 9487665454 என்ற அலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம் (text only – no voice call). தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் அமைதிக்கான உத்திகள் அமைப்பு தொடர்பு கொள்ளும். இந்த வாய்ப்பு குறுகிய காலம் மட்டுமே வழங்கப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எந்தவொரு பரிவர்த்தனைகளையும் எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் (alert) மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவதை வங்கிகள் உறுதிசெய்ய கடமைப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் வங்கிகளின் உடனடி மற்றும் போதுமான சேவையின் முக்கியத்துவத்தை இந்த வழக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று (16-07-2024) வழங்கிய தீர்ப்பில் வழக்கு தாக்கல் செய்தவருக்கு இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்து மேல் சிகிச்சை வழங்கிய மருத்துவமனை ஆவணங்களின்படி முதலாவது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அலட்சியமான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு சேவை குறைபாடு புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரை வாங்கிய நிறுவனம் நீதியை பெறுவதற்கு 15 ஆண்டு காலம் போராடி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. சொந்த உபயோகத்திற்காக ஒரு நுகர்வோர் காரை வாங்கி அதில் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய இயலும். வணிக பயன்பாடுகளுக்கு (commercial purpose) கார் உள்ளிட்ட எந்த பொருளை வாங்கினாலும் நுகர்வோர் என்ற வரையறையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இயலாது. அதே சமயத்தில் சுய தொழிலுக்காக (self-employment) வணிக பயன்பாட்டுக்காக எந்த பொருளை வாங்கினாலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளில் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசியை பெறுபவரிடம் உரிய ஆவணங்களை முன்னரே பெற்றுக் கொண்டுதான் பாலிசியை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி வழங்கும் நிறுவனங்கள் பாலிசியை வழங்கும் முன்னதாக வாடிக்கையாளர்களை மருத்துவ பரிசோதனை செய்து தகவல்களை பெற்று அதன் பின்னர் பாலிசிகளை வழங்கலாம். மாறாக, பணத்தைப் பெற்றுக் கொண்டு பாலிசியை வழங்கி விட்டு முந்தைய நோய் இருந்ததை மறைத்து விட்டார் எனக் கூறி மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை வழங்க மறுப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.