spot_img
April 29, 2024, 12:39 am
spot_img
spot_img

செய்திக்கட்டுரைகள்

நுகர்வோர் பூங்கா

தகவல் களம்

ஆய்வுகள்

சிறப்பு படைப்புகள்

- Advertisement -Central Learning campus

Most Popular

Redesign Consumer Rights

நுகர்வோர் உரிமைகளை மறுவடிவமைப்பு (redesign) செய்ய வேண்டும் – நுகர்வோர் பூங்காவின் நூறாவது கட்டுரை

எந்த ஒரு நுகர்வோரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது   மக்கள் நல அரசின் கடமையாகும்.  இதனை செய்ய தவறும் போது பாதிக்கப்படும் நுகர்வோர் தீர்வு பெறுவதற்கு தகுந்த உதவியை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
challenges for consumer

வழக்கு தாக்கல் செய்வதில் நுகர்வோருக்கு உள்ள சவால்கள்

ஒவ்வொரு நுகர்வோர் நீதிமன்றத்திலும் நுகர்வோர் உரிமை பிரிவு ஒன்று தொடங்கப்பட்டு அதில் ஆய்வாளர்களும் (Inspector of Consumer Rights) உதவியாளர்களும் நியமனம் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்படுவோர் நுகர்வோர் உரிமை ஆய்வாளர்களிடம் புகார் சமர்ப்பித்தால் அதனை தேவையான ஆவணங்களை இணைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் புகாராக மாற்றி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யும் பணியை நுகர்வோர் ஆய்வாளர்கள் செய்ய வேண்டும். நுகர்வோர் உரிமைக்கான சிறப்பு வழக்கறிஞர்கள் (special pleaders for consumer rights) நியமனம் செய்யப்பட்டு நுகர்வோர் ஆய்வாளர்களால் நுகர்வோருக்காக தாக்கல் செய்யும் வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராகி வழக்கு நடத்த வேண்டும்.
Tamil Nadu Human Rights Commission

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்வது எப்படி?

அரசு ஊழியர்கள் அல்லது  அரசின் உதவி பெறும் அமைப்பின் ஊழியர்கள் மனித உரிமை மீறல்களை புரியும்போது பொதுமக்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யலாம். வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் தனிமனித கௌரவம் தொடர்பான உரிமைகள் எவ்வகையிலும் பாதிக்கப்பட்டாலும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்யலாம்.
Consumer Protection Authority

சிறை தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பின்  உத்தரவின்படி இந்த  புலனாய்வு பிரிவு புலனாய்வுகளை மேற்கொள்கிறது.  தேவை என கருதினால் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட எந்த ஒரு  அமைப்பையும் ஒரு குறிப்பிட்ட புகாரை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு உத்தரவிடலாம். 
Wrong money transfer

முதியோருக்கு சேவை குறைபாடு புரிந்த வங்கி ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்...

தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பி வங்கி சேவை குறைபாடு   புரிந்து மன உளைச்சலையும் இழப்பையும் வங்கி ஏற்படுத்தி விட்டது என்று கணேசன் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது விரைவான விசாரணைக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு (16-04-2024) வழங்கிய தீர்ப்பில் வங்கி சேவை குறைபாடு புரிந்துள்ளது சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.