செய்திச்சோலை
செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
சிறப்பு படைப்புகள்
மற்றவர் வாகனத்தை ஓட்டுகிறீர்களா? வாகனத்தை மற்றவர்களுக்கு வழங்குகிறீர்களா? விபத்து இழப்பீடு கிடையாதா? பதில் கூறும் உயர்நீதிமன்ற – நுகர்வோர்...
தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து இருந்தால், வாகன உரிமையாளர் வாகனத்தில் பயணிக்காத போது மூன்றாம் நபர்கள் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வாகனத்தை ஒட்டிய மூன்றாம் நபர்களுக்கு இழப்பீடு வழங்க மறுக்கின்றன. இந்நிலையில் வாகன உரிமையாளர் வாகனத்தில் இல்லாத போதும் மூன்றாம் நபர்கள் வாகனத்தை ஓட்டும் போது விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு தீர்ப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
குறைபாடுள்ள காரை மாற்றி புதிய கார் வழங்கவும் ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் கார் உற்பத்தியாளருக்கு நாமக்கல்...
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், தலைமையிலான அமர்வு 10-01-2025ல்- ல் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதிய காரில் ஏற்பட்ட பெயிண்டிங் குறைபாடுகளை சரி செய்து விட்டதாக சர்வீஸ் சென்டர் ஒப்புக் கொள்வதன் மூலம் காரானது குறைபாடுகளுடன் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சையால் கண்ணை இழந்த பரிதாபம். கண்ணை இழந்தவர் இறந்தும் விட்டார். 26 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம்...
ஓஸ்வாலும் அவரது குடும்பத்தினரும் பிரச்சனையை தீர்க்க இங்குமங்கும் அலைந்து திரும்பி திரிந்து இறுதியாக பூனாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளனர். அங்கு ஓசுவாலுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் தன்மை கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட அவரது வலது கண் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றத்தில் கண் இருப்பது போன்ற அமைப்பையும் ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
வங்கியில் பெற்ற கடனுக்கு தனியார் கம்பெனி சார்பில் மிரட்டுகிறார்கள் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி...
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரிலையன்ஸ் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனியிலிருந்து பேசுவதாகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனுக்கு ரூபாய் 7 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. பணத்தைச் செலுத்துமாறு அணு பிரசாத்தில் மொபைலுக்கும் தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இவர் நேரில் சென்று வங்கி மேனேஜரை சந்தித்து கடனை செலுத்திய பின்னர் “ஏன் பணத்தைக் கேட்டு தொல்லை செய்கிறார்கள்” என்று கேட்டதற்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. வங்கி தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெறவில்லை என்பதும் கடன் ஒப்பந்தத்தை அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு வங்கி விற்று விட்டது என்பதும் அணு பிரசாத்துக்கு தெரிய வந்துள்ளது.
அற்ப காரணங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தர மறுக்கும் நிறுவனங்கள், மருந்து வாங்க போனால் மருந்திலும் தரம் குறைவு கலப்படம்,...
கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்த ஐந்து பெண்கள் மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட தரம் குறைந்த மருந்துகளை பயன்படுத்தி அதன் காரணமாகவே இத்தகைய இறப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடைகளில் விற்கப்படும் மருந்துகள் தங்களது உடல் நலத்தை காக்கும் என்று நுகர்வோர் அவற்றை வாங்கும் நிலையில் அந்த மருந்துகளே உயிருக்கு எமனாக அமைவது வேதனை அளிப்பதாக உள்ளது.