செய்திச்சோலை
செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
சிறப்பு படைப்புகள்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு கேரள மாநில நுகர்வோர் ஆணைய தீர்ப்பு வரப்பிரசாதமா?
தமிழகத்திலும் மருத்துவ அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிரச்சினை ஏற்படும் போது முதலாவதாக மாவட்ட அளவிலான குறை தீர்ப்பு குழுவை (District level committee) அரசு ஊழியர்கள் அணுகலாம். இந்தக் குழுவின் முடிவில் திருப்தி இல்லை எனில் மாநில அளவிலான குறை தீர்ப்பு குழுவை குழுவில் (State level committee) மேல்முறையீடு செய்யலாம். இந்தக் குழுவில் இந்த குழுவானது நிரந்தரமானது அல்ல. இதில் உள்ளவர்கள் வேறு அரசு பணிகளை கவனிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக, இந்த குழுவில் மருத்துவ துறையின் ஒரு இணை இயக்குனரும் மாவட்ட கருவூல அலுவலரும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியும் இருப்பார்கள். இந்த குழு குறிப்பிட்ட இடைவெளிகளில் கூட வேண்டும் என்ற விதிகள் எதுவும் கிடையாது. இந்த குழுவுக்கு ஒரு சட்டபூர்வமான ஏற்பாடு முழுமையாக இல்லை எனலாம்.
விலைவாசி உயர்வுக்கும் வரி உயர்வுக்கும் ஊழல் முக்கியமான காரணம் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ....
எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும் எந்த ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டாலும் அவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாவிட்டால் அந்தச் சட்டத்தாலும் அந்த அமைப்பாலும் எந்த பயன்களையும் உருவாக்க முடியாது. ஊழலை ஒழிக்கும் உயர்நிலை அமைப்பான தமிழ்நாடு லோக் ஆயுக்தா பற்றி தமிழக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தன்னார அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமூக செயல்பாட்டாளர்களின் கடமையாகும். தமிழக மக்களிடையே லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ரோட்டரி இன்டர்நேஷனல் தொடங்க வேண்டும் என டாக்டர் வீ. ராமராஜ் கேட்டுக்கொண்டார்.
குழந்தையின் தலையில் காயங்களை ஏற்படுத்திய மருத்துவர், நான்காண்டு கழித்து இழப்பீட்டு கோரிக்கையை தள்ளுபடி செய்த இன்சூரன்ஸ் நிறுவனம், சேவை...
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த போதிலும் மருத்துவர் கட்டாயப்படுத்தி இயற்கையான வகையில் வைத்தியம் பார்த்து பிரசவம் பார்த்தார் என்றும் குழந்தை பிறந்த பின்பு குழந்தையின் தலையில் மிகுந்த காயங்கள் இருந்தன (causing scalp injuries) என்றும் இதற்கு மருத்துவரின் அலட்சியமான மருத்துவ சிகிச்சையே காரணம் என்றும் மருத்துவர் மீது ஆந்திர பிரதேச நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். மருத்துவர் அலட்சியமாக (medical negligence) செயல்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கியுள்ளார் என்பதை உறுதி செய்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
ஷூவை விற்ற கடை மீது 1.14 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு. தவறான ரத்த பரிசோதனை அறிக்கை வழங்கிய...
வாங்கிய ஷூக்களை உடனே காலில் மாட்டி பயன்படுத்த தொடங்கியுள்ளார் தேஷ்முக். ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே இரண்டு காலுக்கும் வழங்கப்பட்ட ஒவ்வொரு ஷூக்கும் இடையில் சற்று உயர வேறுபாடு இருப்பதை கண்டறிந்ததுள்ளார். இந்த பிரச்சனை காரணமாக தடுமாறி பொது இடத்திற்கு கீழே விழுந்துள்ளார். உடனடியாக ஷூக்களை வாங்கிய குஸ்ஸி ஷூஸ் நிறுவன விற்பனை நிலையத்திற்கு அவர் சென்று பிரச்சனையை தெரிவித்துள்ளார். ஒருமுறை விற்பனை செய்யப்பட்டு விட்டால் அதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய தங்களது நிறுவனத்தின் மற்றொரு கடைக்கு செல்ல வேண்டும் என்று விற்பனையாளர் தெரிவித்துள்ளார். இதனால் இதனால் விற்பனையாளர் தெரிவித்தபடி நிறுவனத்தின் மற்றொரு கடைக்கு தேஷ்முக் சென்றுள்ளார்.
ஐந்து நிமிடம் ஒதுக்கி நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை படியுங்கள்! மற்றவர் பயன் பெற அனைவருக்கும் அனுப்புங்கள்! உச்ச நீதிமன்ற...
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நுகர்வோர் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மற்ற நீதிமன்றங்களை காட்டிலும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவது எளிதானது (simple). நுகர்வோர் நீதிமன்றங்களில் 5 லட்சம் வரை நீதிமன்ற கட்டணம் கிடையாது. அதற்கு மேலும் பெயரளவிலேயே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (inexpensive). விரைவில் தீர்வு காணும் வகையில் சுருக்க முறையிலேயே இங்கு விசாரணை (speedy) நடைபெறுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி தீர்வு காண்பது எப்படி? என்று அறிய தங்களது பொன்னான ஐந்து நிமிடத்தை ஒதுக்கி இந்த கட்டுரையை படிக்குமாறும் தங்களது நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புமாறும் நுகர்வோர் பூங்கா தங்களை அன்புடன் வேண்டுகிறது. இந்தக் கட்டுரை தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ கட்டாயம் பயன்படக்கூடியதாக இருக்கும்.