spot_img
June 2, 2025, 4:45 pm
spot_img

நுகர்வோர் தீர்ப்புகள்: மருத்துவமனை அலட்சியத்தால் பிரசவத்துக்கு சென்ற பெண் பலி. புரோட்டாவுக்கு குருமா கொடுக்காததால் நீதிமன்றத்துக்கு சென்ற வழக்கு.

மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரை இழந்த பெண்ணின் கணவருக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூரில் வசித்து வந்த 28 வயதான பூஜா கோயல் என்பவர் சஞ்சய் கோயிலின் மனைவி. இவர்களது தாம்பத்திய வாழ்க்கையின் பயனாக பூஜா கோயல் கருவுற்றதால் (pregnancy), ஜெய்ப்பூரில் உள்ள கூக்கூன் மருத்துவமனையில் (Cocoon hospital) மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஆரம்பம் முதல் வைத்தியம் பார்த்து வந்துள்ளனர். அறுவைச் சிகிச்சை மூலமாகவே குழந்தையை பெற்றெடுக்க இயலும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் சிசேரியன் (caesarean) அறுவை சிகிச்சைக்காக கடந்த 2015 ஜனவரி 8 ஆம் தேதி அன்று பூஜா கோயல் கூக்கூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் காய்ச்சலும் சளியும் (cold and fever) பூஜா கோயலுக்கு இருந்துள்ளது. இதுகுறித்து தகுந்த பரிசோதனை (diagnose) செய்து சிகிச்சை வழங்குமாறு பூஜா கோயிலின் கணவர் சஞ்சய் கோயில் மருத்துவமனையிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மருத்துவமனை சார்பில் மேற்கொள்ளவில்லை. தனது மனைவியை மருத்துவமனையில் இருந்து விடுவித்தால் (discharge) வேறு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் சளிக்கான சிகிச்சை பெற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தும் சஞ்சய் கோயிலின் கோரிக்கை ஏற்று பூஜா கோயலை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கவில்லை.

புஜா கோயாலின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை நாராயண ஹிர்த்யாலயா மருத்துவமனையில் (Narayana Hridayalaya Hospital) உள்ள மருத்துவரிடம் சமர்ப்பித்து விவரங்களை சஞ்சய் கோயல் தெரிவித்துள்ளார். நாராயண ஹிருதயாலயா மருத்துவர்கள் உடனடியாக கோகூன் மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திருமதி கோயல் பன்றிக் காய்ச்சலால் (H1N1- swine flu) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி, அவசர பரிசோதனைக்கு பரிந்துரைத்தனர். இதனால், முறையான மருத்துவ அறிக்கையை வழங்காமல் அவசர அவசரமாக 2015 ஜனவரி 12 அன்று பூஜா கோயலை மருத்துவமனையில் இருந்து கூக்கூன் மருத்துவமனை விடுவித்துள்ளது. 

உடனடியாக, பூஜா கோயல் நாராயண ஹிருதயாலயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், ஜனவரி 9 முதல் ஜனவரி 12, 2015 வரை தேவையான நோயறிதல்களைத் தொடங்க கோகூன் மருத்துவமனை தவறிவிட்டது. இதன் விளைவாக, பூஜா கோயல் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது, பூஜா கோயல் ஜனவரி 15, 2015 அன்று இறந்துவிட்டார்.

மருத்துவமனையின் அலட்சியத்தால் (medical negligence) தனது மனைவி இறந்ததாக சஞ்சய் கோயல் மருத்துவமனை மீது தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையமானது (State Consumer Disputes Redressal Commission) கடந்த 2016 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் கோகூன் மருத்துவமனை அலட்சியமான மருத்துவ சிகிச்சியை புரிந்துள்ளது என்றும் இதற்காக ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டை (compensation) மருத்துவமனை வழங்க வேண்டும் என்றும் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவமனை தாக்கல் செய்த மேல்முறையீட்டை கடந்த 9 மே 2025 அன்று தள்ளுபடி செய்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (National Consumer Disputes Redressal Commission)  உத்தரவு பிறப்பித்துள்ளது (First Appeal No490 of 2016  Date: 9 May 2025).

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பூஜா கோயலுக்கு மருத்துவ விதிமுறைகளின்படி தகுந்த பரிசோதனைகளை கோகூன் மருத்துவமனை மேற்கொள்ளவில்லை என்றும் அலட்சியமான சிகிச்சையால் அவருக்கு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்றும் இதனால் 28 வயதான இளம் பெண்மணி பெண்மணிக்கு இறப்பு ஏற்பட்டதோடு அவரது குழந்தைகளுக்கு தயார் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு காரணம் கோகூன் மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சை என்றும் தேசிய நுகர்வோர் ஆணையம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில நுகர்வோர் ஆணையம் வழங்கிய உத்தரவுப்படி தவறு புரிந்த மருத்துவமனை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 15 லட்சத்தை மைனர் குழந்தைகளின் பெயரில் வங்கியில் வைப்பீடு செய்ய வேண்டும் என்றும் மீத தொகை ரூபாய் 10 லட்சத்தை இறந்தவரின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புரோட்டாவுக்கு குருமா கொடுக்காததால் நீதிமன்றத்துக்கு சென்ற வழக்கு

பத்திரிகையாளரான ஷிபு எஸ் வயலகத்வும் அவரது நண்பரும் கடந்த 2024 நவம்பர் மாதத்தில் கேரளாவில் கொச்சியில் கோலஞ்சேரியில் உள்ள தி பெர்சியன் டேபிள் என்ற உணவகத்துக்கு சாப்பிட சென்று  பரோட்டா மற்றும் மாட்டிறைச்சி வறுவலை ஆர்டர் செய்தனர். அவர்கள் கட்டணம் இல்லாமல் குழம்பு வழங்குமாறு கேட்டனர், ஆனால் பணம் இல்லாமல் குழம்பு வழங்க உணவகம் மறுத்துவிட்டது. 

புரோட்டா உடன் குருமா தரவில்லை என்று மாவட்ட சப்ளையர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் உணவு வழங்கல் அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி இருவரும் விசாரணை நடத்தினர், உணவகம் குருமாவுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கும் கொள்கையை உணவகம் வைத்துள்ளது என்று விசாரணை நடத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் உணவகம் சேவை குறைபாடு புரிந்ததாக கூறி உணர்ச்சி ரீதியான துன்பம் மற்றும் மன வேதனைக்கு ₹1 லட்சம், வழக்கு செலவுகளுக்கு ₹10,000 வழங்க உத்தரவிடுமாறு உணவகத்தின் மீது சிபு எஸ் வயலகத் வழக்கு தாக்கல் செய்தார்.  

உணவின் தரம், அளவு அல்லது பாதுகாப்பு பற்றி புகாரில் எதுவும் இல்லை என்றும் உணவகம் குழம்பு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் புகார்தாரரிடம் அதற்கான கட்டணம் வசூலிக்கவில்லை என்றும் இதனால் உணவகம் சேவை குறைபாடு புரிந்துள்ளது என்று முடிவு செய்ய இயலாது என கடந்த 19 மே 2025 அன்று எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: நுகர்வோர் நீதிமன்றத் தீர்ப்புகள் மக்களிடையே நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை மேம்பட செய்கிறது.

கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்!
 
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும் (Click Here!)
 
கருத்துக்களும் புகைப்படமும் வெளியாக வெளியாக வேண்டுமா? விவரங்களுக்கு இங்கே தொடவும்.  (Click Here!)  
 
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர் பொறுப்புகளில் இணைய விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)
 
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக (மார்க்கெட்டிங் ட்ரெய்னிங்யாக) அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக (மார்க்கெட்டிங் ஏஜெண்டாக) பணியாற்ற விருப்பமா? இங்கே தொடவும் (Click Here!)  
 
வாக்காளரியல் (Voterology) என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! இங்கே தொடவும் (Click Here!)  

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்