spot_img
September 8, 2024, 7:42 am
spot_img

பெயரளவில் கடன் கொடுத்த கூட்டுறவு சங்கம் வாடிக்கையாளருக்கு ரூ 50,000/-  இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செங்கப்பள்ளியில் வசிப்பவர் பொன்னுச்சாமி மகன் யோகேஸ்வரன் (52). இவர் காத பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2021 பிப்ரவரியில் நகைகளை அடமானம் வைத்து ரூ 1,15,000/- கடன் கேட்டுள்ளார். நகைகளைப் பெற்றுக் கொண்ட கூட்டுறவு சங்கம் அவருக்கு ரொக்கமாக பணத்தை தராமல் அவரது சேமிப்பு கணக்கில் பணத்தை வரவு வைத்துக் கொடுத்துள்ளது. 

2021 ஆம் ஆண்டில் கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்ட நகை கடன் அனைத்தையும் கடன் நிவாரண திட்டத்தின் கீழ் அரசு தள்ளுபடி வழங்கியுள்ளது. ஆனால், யோகேஸ்வரன் பெயர் பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்படாமல் நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதனால், கூட்டுறவு சங்கத்தின் மீதும்   கூட்டுறவு துறையின் இணைப்பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் மீதும் யோகேஸ்வரன் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

நகை கடன் பெற்றுக்கொண்டு அந்தத் தொகையை சேமிப்பு கணக்கில் வைத்திருந்ததால் வழக்கு தாக்கல் செய்தவரை நகை கடன் தள்ளுபடிக்கான பயனாளிகள் பட்டியலில் சேர்க்க விதி இல்லை இதனால், தாங்கள் சேவை குறைபாடு புரியவில்லை என்று கூட்டுறவு சங்கமும் கூட்டுறவு துறை உயர் அலுவலர்களும் விசாரணையின் போது நுகர்வோர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். 

இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்  தலைமையிலான அமர்வு   நேற்று (25-06-2024) தீர்ப்பு வழங்கியது.. கூட்டுறவு சங்கத்தில் பணம் கையிருப்பு இல்லாமல் வாடிக்கையாளரிடம் நகைகளை அடமானமாக பெற்று கடன் தொகையை சேமிப்பு கணக்கில் பெயரளவில் வரவு வைத்துக் கொடுத்திருப்பதும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்க சென்றபோது பணம் இல்லை என சங்கத்தில் தெரிவிக்கப்பட்டதால் கடன் பெற்றவர்  பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது   என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

பணம் கையிருப்பு இல்லாமல் பெயரளவில் கடன் வழங்கிய கூட்டுறவு சங்கத்தின் செயல் சேவை குறைபாடு என்றும் இதற்கு இழப்பீடாக நான்கு வார காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் தள்ளுபடி செய்வது அரசின் கொள்கை முடிவு என்பதால் கடன் தள்ளுபடி செய்யாததை சேவை குறைபாடு என கூற முடியாது என்றும் அரசு அலுவலர்களான கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தவருக்கு சேவை வழங்கும் பணியினை புரிபவர்களும் அல்ல – வழக்கு தாக்கல் செய்தவர் அவர்களுக்கு நுகர்வோரும் அல்ல என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலர்கள் மீதான புகாரை தள்ளுபடி செய்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

சாஜ். ம
சாஜ். ம
சாஜ். ம, வழக்கறிஞர்/ சட்டக் கல்லூரி விரிவுரையாளர்

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்