நுகர்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் பாதிப்புக்குள்ளாகும் போது தீர்வு காணவும் நுகர்வோர் உரிமைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்புக்கும் “நுகர்வோர் பூங்கா” படியுங்கள்! ● செய்தி மற்றும் தகவல் கட்டுரைகளுக்கும் அறிவை மேம்படுத்த உதவும் படைப்புகளுக்கும் “பூங்கா இதழ்” படியுங்கள்! ● கட்டணமில்லாமல் படிக்க பொதுத்தளமாக வெளியிடப்படும் “பூங்கா இதழ்” மற்றும் “நுகர்வோர் பூங்கா” - இணையதள இதழ்களுக்கு ஆதரவு தாருங்கள்! விவரங்களுக்கு “நாங்கள்” பகுதியை படியுங்கள்!
அரசியலமைப்புக் கல்வியும் வாக்காளரியல் கல்வியும் நல்லாட்சியும் அமைதியையும் வழங்கும் கருவிகள் ஆகும். தனி கல்வி பிரிவாக எந்த பல்கலைக்கழகங்களிலும் வாக்காளரியல் போதிக்கப்படுவதில்லை. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரசியலமைப்பு மற்றும் வாக்காளரியலில் முதுகலை (எம்.ஏ.,) பட்டங்கள் கற்பிக்கப்பட வேண்டும் இளங்கலை (பி.ஏ.,) பட்டப்படிப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தேர்வுத்தாளாக அரசியலமைப்பு கல்வியும் வாக்காளரியல் கல்வியும் இருக்க வேண்டும். இத்தகைய கல்வி திட்டங்களை அறிமுகப்படுத்த இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் வீ. ராமராஜ் குறிப்பிட்டார்.
அறிவு, நேரம், உடல் மற்றும் மனநலம், மக்கள் தொடர்புகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் ஆகியன ஐந்து வகையான சொத்துக்களில் முதன்மையானது அறிவை தேடுவது. போட்டி தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு அறிவுத்தேடல் பிரதான இலக்காக இருக்க வேண்டும். தனி மனிதர்களின் வெற்றிக்கும் சமூகத்தின் விழிப்புணர்வுக்கும் அறிவு தேடல் அவசியமானது. இலக்கை நிர்ணயம் செய்து, செயல் திட்டத்தை வடிவமைத்து, அதற்காக தொடர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எத்தகைய பழக்கங்களை, அறிவை, திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நாமாக முடிவு செய்வதே வெற்றிக்கு விதி செய்வதாகும் என்று டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
நவீன், ரம்யா, ஜீவிதா, ஞானிதா, கீர்த்தனா, தேவதர்ஷினி உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள் நாமக்கல் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார்கள். நாட்டின் அரசு எப்படி இயங்குகிறது? அதன் அதிகார அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன? என்பது குறித்து அறிய இரண்டு நாட்கள் சென்னைக்கு கல்வி சுற்றுலா (05, 06, ஜனவரி 2026) சென்று வந்துள்ளனர். ஒவ்வொரு சட்டக் கல்லூரி மாணவரும் நாட்டை இயக்கும் அமைப்புகளையும் அரசின் அதிகார அமைப்புகளையும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ள இந்த சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட முன்னாள் நுகர்வோர் நீதிபதியும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினருமான டாக்டர் வீ. ராமராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
சட்டம் இயற்றும் அமைப்புகளுக்கும் ஆட்சி நடத்தும் அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது போன்ற இணையான அந்தஸ்தை தேர்தல் நிறுவனங்களுக்கு அரசியலமைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் வாக்கு வாக்காளர் மற்றும் தேர்தல்களில் ஏற்படும் ஊழல்களை அகற்றவும் மக்களாட்சியை பாதுகாக்கவும் இயலும் என ராமராஜ் தெரிவித்தார்.
வாக்கு, வாக்காளர், தேர்தல்கள் ஆகியன குறித்து படிப்பதும் ஆய்வு செய்வதும் வாக்காளரியல் (Voterology) கல்வியாகும். மக்களுக்கு நலன் வழங்கும் மக்களாட்சி உருவாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளரியல் கல்வி போதிக்கப்பட வேண்டும். "எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர்கள்" ("Voters above all else") என்பது. வாக்காளரிலிசத்தின் (Voterologism) மையக் கருத்தாகும். வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே வாக்காளரிலிசத்தின் வேலையாகும் என ராமராஜ் தெரிவித்தார்.
https://thenewspark.in/dr-v-ramaraj-tamil-nadu-lokaukta-member-father-of-voterology-speech-on-voterology-at-government-law-college-namakkal
https://tamilnewsbeat.com/2025/10/5098/
Law students should bring out corruption in election process through research, says Lokayukta member - The Hindu https://share.google/DF5EENK5Ar0nYQ0gB
நுகர்வோர் பூங்கா (The Consumer Park) கருத்து: கல்லூரி...
கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவ நுகர்வோர் சங்கத்தின் சார்பாக கல்லூரி முதல்வர் எஸ். சுதா அவர்கள் தலைமையில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுவதன் மூலமாக மட்டுமே நுகர்வோருக்கு ஏற்படும்...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் லோக்பால் மற்றும் லோகயுக்தா விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் டாக்டர் யூசுப் கான் தலைமையிலும் பேராசிரியர்கள் ஆர். சிவக்குமார், பி. கிருஷ்ணம்மாள் முன்னிலையிலும் நடைபெற்றது. ஊழல் என்பது தனிமனித உரிமை மீறல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் உரிமை மீறலாகும் என்று கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது.