spot_img
May 14, 2024, 10:00 am
spot_img

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் புகார் செய்வது எப்படி?

கடந்த 1966 ஆம் ஆண்டு இந்திய அரசால் அமைக்கப்பட்ட முதலாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் லஞ்ச ஒழிப்புக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில்   மத்தியில் லோக்பால், மாநிலத்தில் லோக் ஆயுக்தா என்ற அமைப்புகளை ஏற்படுத்த 1966 ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் பாராளுமன்றத்தில்  இதற்கான சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இறுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில அரசும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு   தமிழகத்தில்  அமைக்கப்பட்டது.  இந்த அமைப்பில்   ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை அல்லது 25 ஆண்டுகள் சட்டம், பொது நிர்வாகம், லஞ்ச ஒழிப்பு, நிதி போன்ற துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணரை தலைவராக நியமிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது   தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் இரண்டு நீதி சார்ந்த உறுப்பினர்களும் (judicial members) இரண்டு நீதி  சாராத உறுப்பினர்களும் (non-judicial members) உள்ளார்கள்.  நீதி சார்ந்த உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகளும் நீதி சாராத உறுப்பினர்களாக 25 ஆண்டுகள் சட்டம்,   பொது நிர்வாகம், நிதி, லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் நீதி விசாரணை (judicial wing) பிரிவின் நிர்வாகியாக பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகப் பிரிவில் (administrative wing) அரசின் செயலாளர் (Secretary to the government) அந்தஸ்திலான ஒருவர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.   விசாரணை பிரிவில் (investigation wing) காவல்துறை கண்காணிப்பாளருக்கு குறையாத தகுதியுள்ள ஒருவர் இயக்குனராக (director) நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில அரசின் அனைத்து வகையான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீதான லஞ்ச புகார்களையும் மாநில அரசின் உதவி பெறும் அமைப்புகளின் ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்களையும்  லோக் ஆயுக்தா சட்டத்தில் கூறப்பட்டுள்ள வகையிலான புகார்களையும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்யலாம். குற்ற சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்த பிரச்சினைகளையும் சட்டத்தில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ள பிரச்சனைகளையும் குறித்து  லோக் ஆயுக்தாவில் புகார் செய்ய இயலாது.

தமிழ்நாடு   லோக் ஆயுக்தா விதிகளில் சொல்லப்பட்டுள்ள மாதிரியில் புகார்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு லோக் ஆயுக்தா முகவரி: 

Tamil Nadu Lokayukta, Sidco Buildings, 6th & 7th Floor, Thiru. Vi. Ka Industrial Estate, Guindy, Chennai – 600 032.

நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்கா
நுகர்வோர் பூங்காவின் படைப்பு

தொடர்புடைய கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Central Learning campus

சமீபத்திய கட்டுரைகள்