எப்போது கிடைக்கும் நுகர்வோருக்கு முழு சுதந்திரம்?

நுகர்வோர் எந்தவித அழுத்தங்களுக்கும் ஆட்படாமல் தங்களுக்கு தேவையான பொருட்களையும் சேவைகளையும் பணம் கொடுத்து வாங்க  கூடிய சுதந்திரம், அவ்வாறு வாங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளக்கூடிய சுதந்திரம், பாதிப்பு ஏற்படும்போது விரைவான நீதியை நீதித்துறையின் கீழ் இயங்கும் நீதி பரிபாலன அமைப்புகள் மூலம் பெறும் சுதந்திரம் ஆகியவற்றை பெற போதிய நடவடிக்கைகளை ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும்  பொதுமக்களும் தகுந்த முன்னெடுப்பை செய்தால் மட்டுமே உண்மையான நுகர்வோர் சுதந்திரத்தை அடைய முடியும்.