விண்ணைத் தொடும் காலி மனை இடம், நிலத்தின் விலை  – காரணம் என்ன? எப்படி கட்டுப்படுத்துவது?

காலி மனை இடங்களுக்கும் நிலத்திற்கும் அரசு சந்தை மதிப்பை நிர்ணயம் செய்துள்ளது. தரவுகளை ஆய்வு செய்தால் பதிவு செய்யப்படும் விற்பனை ஆவணங்களில் 99 சதவீதம் சந்தை மதிப்பு தொகைதான் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் நில விற்பனை முகவர்களை அணுகி அரசு நிர்ணயம் செய்துள்ள சந்தை மதிப்பில் நிலம் வாங்கிய தருமாறு கேட்டால் நம்மை மேலேயும் கீழேயும்தான் பார்ப்பார்கள். நில விற்பனை முகவர்களும் நிலத்தின் விலை உயர்வதற்கு காரணம் என்று பலரால் கூறப்படுகிறது.