நுகர்வோர் பாதுகாப்பு என்பது வெறும் மாயையா?

நூறு நுகர்வோர்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது குறைந்தபட்சம் 90 நுகர்வோர்கள் தீர்வுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகும் நிலை ஏற்படும் போதுதான் நமது நாட்டில் உண்மையான நுகர்வோர் பாதுகாப்பு கலாச்சாரம் ஏற்பட்டுள்ளது என்று கூற இயலும். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமெனில் தற்போது முழுமையான நுகர்வோர் பாதுகாப்பு என்பது இல்லை என்றே கூறலாம். முழுமையான நுகர்வோர் பாதுகாப்பை உருவாக்குவது மக்களாட்சி அரசின் அத்தியாவசிய கடமையாகும்.